சிம்பு மீது பிரபல தயாரிப்பாளர் பரபரப்பு புகார் அளித்திருப்பதாக தெரிய வந்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமான இவர் தற்போது தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.
இவரது நடிப்பில் இறுதியாக வெளியான வெந்து தணிந்தது காடு படத்தை கௌதம் மேனன் இயக்க வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்திருந்தது.
இந்த படத்தை தொடர்ந்து சிம்பு தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாக உள்ள எஸ் டி ஆர் 48 என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்த சூழ்நிலையில் ஐசரி கணேஷ் அவர்கள் நடிகர் சிம்பு தனக்கு தொடர்ந்து மூன்று படங்களில் நடித்துக் கொடுப்பதாக ஒப்பந்தம் போட்டுள்ளார். அப்படி இருக்கையில் தற்போது தனக்கு நடித்துக் கொடுக்க வேண்டிய படத்தை விட்டுவிட்டு கமல் தயாரிப்பில் நடிக்க சென்று விட்டார்.
அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தயாரிப்பாளர் சங்கத்தில் ஐசரி கணேஷ் அவர்கள் புகார் அளித்துள்ளார் என சொல்லப்படுகிறது.
இதனால் திரும்பவும் சிம்புவுக்கு சிக்கலா என ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.