அனுமதி இல்லாமல் செல்பி எடுத்த ரசிகரின் போனை அஜித் ஸ்டைலில் பிடுங்கி உள்ளார் தமிழ் நடிகர் ஒருவர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்துடன் விளங்கிவரும் இவர் தேர்தலில் இப்போது வாக்களிக்க சென்று இருந்தபோது அப்போது ரசிகர் ஒருவர் அனுமதியில்லாமல் செல்பி எடுக்க அவரது ஃபோனை பிடுங்கி பிறகு எச்சரித்து மீண்டும் செல்போனை திருப்பிக் கொடுத்தார்.

இந்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது. அதேபோல் நடிகர் சிவகுமார் அவர்களின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது அனுமதி இல்லாமல் செல்பி எடுத்த ரசிகரின் போனை பிடுங்கி தூக்கி எறிந்த விஷயமும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த சம்பவங்களைப் போல தற்போது தமிழ் நடிகர் ஒருவரும் செய்துள்ளார்.

நடிகர் சித்தார்த் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது ரசிகர் ஒருவர் அவருடைய அனுமதி இல்லாமல் செல்பி எடுக்க போனை பிடுங்கி கொண்டுள்ளார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.