Shradha Srinath to act as COP :
இரும்புத்திரை 2 படத்தில் விஷால் ஆர்மி மேனாக நடிக்க ஸ்ரத்தா ஸ்ரீநாத் போலீஸாக நடிக்கவுள்ளாராம்.
விஷால் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் இரும்புத்திரை. இணையத்திற்கு பின்னால் இருக்கும் சதி வேலைகளை வெட்ட வெளிச்சத்திற்கு கொண்டுவந்த இப்படம் வசூலில் பட்டையை கிளப்பியது.
தல 59-ஐ தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் நடிக்கும் அடுத்த படம்.!
இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறதாம். ஆனால் முதல் பாகத்தை இயக்கிய பி.எஸ்.மித்ரனுக்கு பதிலாக அறிமுக இயக்குனர் ஆனந்த் இப்படத்தை இயக்குகிறாராம். மேலும் ஸ்ரத்தா ஸ்ரீநாத் இப்படத்தில் நாயகியாக நடிக்கிறாராம்.
இந்த தகவலை நாம் ஏற்கனவே கூறியிருந்தோம். இந்நிலையில் தற்போது கிடைத்திருக்கும் புதிய தகவலின்படி,
இப்படத்தில் விஷால் ஆர்மி மேனாக நடிக்க ஸ்ரத்தா ஸ்ரீநாத் போலீஸாக நடிக்கவுள்ளாராம். இவர் தற்போது அஜித்துடன் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார்.
தற்சமயம் சுந்தர் சி படத்தின் பணிகளில் இருக்கும் விஷால் அதன் பணிகள் முடிந்ததும் இப்படத்தில் கவனம் செலுத்தவுள்ளாராம்.