Shopping Malls Open 24 hours :
சென்னை: தமிழகத்தில் இனி 24 மணி நேரமும் கடைகள் மற்றும் நிறுவனங்கள் செயல்பட அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. எனவே இனி 24 மணி நேரமும் ஷாப்பிங் செல்லலாம்.
தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் செயல்படுவதற்கு இதுவரை அரசு அனுமதி தரவில்லை.
மருந்தகங்கள், சில வகையான நிறுவனங்கள், மற்றும் ஐடி நிறுவனங்கள் மட்டுமே 34 மணி நேரம் செயல்பட அரசு அனுமதி அளித்து வந்தது.
மேலும் ஓட்டல் உள்பட வணிக நோக்கு கடைகள் போன்ற அனைத்து கடைகளுக்குமே 24 மணி நேரம் செயல்பட அனுமதி இல்லை. இதனால் இரவு 10 -11 மணிக்கு மேல் உணவுகள் கிடைக்காமல் மக்கள் பல நகரங்களில் தவித்து வருகிறார்கள்.
அதுமட்டுமின்றி, இரவு நேரங்களில் அத்தியாவசிய தேவைகள் எதற்கும் மக்கள் வெளியில் சென்று வாங்க முடியாத நிலையில் இருந்தனர்.
எனவே இது தொடர்பாக வணிகர்கள் சங்கத்தினர் தமிழக அரசிடம் 24 மணிநேரமும் கடைகள் மற்றும் வணிகநிறுவனங்கள் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
மழை குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு – மக்களே உஷார்.!
இந்நிலையில் வணிக சங்கத்தினரின் இந்த கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் இனி 24 மணி நேரமும் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் செயல்பட அனுமதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
எனவே இனிமேல் இரவு 10 மணி முதல் எந்த நேரத்திலும், மக்கள் வேண்டிய பொருட்களை ஷாப்பிங் செய்யலாம்.
அதோடு மட்டுமல்லாமல், இரவு எந்த நேரமாக இருந்தாலும் விரும்பிய வகையில், உணவுகளை வாங்கி சாப்பிட்டு வரலாம்.
மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காகவே இரவு நேரங்களில் கடைகள் செயல்பட அரசு அனுமதி அளிக்காமல் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.