பாரதி கண்ணம்மா சீரியலிருந்து ரோஷினி தொடர்ந்து இன்னொரு முக்கிய நடிகையும் வெளியேற இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
Shocking Update About Bharathi Kannamma : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் நாயகியாக நடித்து வந்தவர் ரோஷினி ஹரிப்ரியன். சில காரணங்களால் இந்த சீரியலில் இருந்து திடீரென விலகி கொள்ள அவருக்கு பதிலாக வினுஷா தேவி என்பவர் நடித்து வருகிறார்.
கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வந்தவரை மாற்றியதால் இந்த சீரியல் பின்னடைவை சந்தித்து வருவதாக சொல்லப்படுகிறது. இப்படியான நிலையில் ரோஷினியை தொடர்ந்து மேலும் ஒருவர் வெளியேற இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள புதிய சீரியலில் கண்மணி நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் பாரதிகண்ணம்மா சீரியல் அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சீரியலை விட்டு வெளியேறப் போவதாக சின்னத்திரை வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நாம அதை பத்தி பேசுவதே இல்ல – Interview With Putham Pudhu Kaalai Vidiyadhaa Movie Team
ஆனால் இதுவரை கண்மணி இது பற்றி எந்தவித தகவலையும் வெளியிடாததால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது உறுதியாகவில்லை.