theft
திருச்சியில் பிரபல லலிதா ஜுவல்லரியில் கொள்ளையர்கள் புகுந்து கொள்ளையடித்த பல புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

theft

Shocking Pics of Trichy Lalitha jewellery theft – திருச்சியில் சத்திரம் பேருந்து நிலையம் அருகே லலிதா ஜூவல்லரி நகை கடை உள்ளது. இன்று காலை அந்த கடையில் பணிபுரியும் ஊழியர்கள் கடைக்கு வந்தபோது அதன் கீழ் தளத்தில் வைக்கப்பட்டிருந்த பல நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதன்பின் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

theft

கொள்ளையடிக்கப்பட்ட நகையின் மதிப்பு ரூ.50 கோடி மதிப்புள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளது. நள்ளிரவு ஒரு மணியளவில் முகத்தில் முகமூடி அணிந்து இரு கொள்ளையர்கள் உள்ளே வந்தது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

உங்கள் வீட்டில் தங்கம் தங்கவில்லையா? இதோ இந்த நட்சத்திரத்தில் வாங்கினால் தங்கத்தின் ஆயுள் நீடிக்கும்.

theft

மேலும், மோப்பநாய் தங்களை கண்டறியக் கூடாது என்பதற்காக அங்கு மிளகாய் பொடியை அவர்கள் தூவி சென்றுள்ளனர்.

theft

நகையின் பின்புறம் உள்ள கல்லூரி மைதானத்தின் வழியாக அவர்கள் உள்ளே வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ் சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்தார். விசாரணையையும் முடுக்கி விட்டுள்ளார். இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

theft

இந்நிலையில், கொள்ளையர்கள் சுவற்றில் இப்படி ஓட்டையிட்டனர், எங்கெங்கே கொள்ளையடித்தனர் என்பது போன்ற பல புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதில், நகை வைக்கப்பட்டிருந்த பல நகை பெட்டகங்கள் காலியாக இருப்பது தெரிகிறது.

theft