அடுத்தடுத்து சீரியலில் இருந்து முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த இருவர் வெளியேறியதால் தயாரிப்பாளர் தலையில் துண்டைப் தான் போடனும் என சீரியல் குழு தெரிவித்துள்ளது.

Shocking News About Vanathai Pola Serial : தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் வானத்தைப்போல. மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த இந்த சீரியலில் இருந்து முதலில் ஸ்வேதா என்பவர் விலகினார். துளசி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

ப்ரொடக்ஷன் தரப்பில் சில பிரச்சனைகள் இருந்தது. தேதி ஒதுக்குவதில் பிரச்சனைகள் இருந்ததால் சீரியலில் இருந்து விலகிக் கொண்டேன். மேலும் இதைப் பற்றி பேச விரும்பவில்லை என அவர் கூறிவிட்டார். அவரைத் தொடர்ந்து சில நாட்கள் கழித்து சீரியலில் ஹீரோவாக நடித்து வந்த தமன் அவர்களும் விலகிக் கொண்டார். இதனால் சீரியல் குழு மிகுந்த அதிர்ச்சியில் உள்ளது.

இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள தகவலில் தமன் ஏன் விலகினார் என எங்களுக்கே தெரியாது. சினிமாவில் வாய்ப்பு இல்லை என்றுதான் அவர் சீரியலுக்கு வந்தார். ஆனால் இப்போது சினிமாவில் வாய்ப்பு கிடைத்திருக்கு என விலகிக்கொண்டது எங்களால் நம்பமுடியவில்லை. அவரிடம் இருந்து சரியான பதில் எங்களுக்கு கிடைக்கவில்லை.

ஐஎஸ்எல் மிரட்டல் : கேரளாவை வீழ்த்தி, சென்னையின் வெற்றி இன்று தொடருமா?

ஒரே சீரியலில் அடுத்தடுத்து முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் இருவர்கள் வெளியேறினால் அந்த சீரியலை மக்கள் புறக்கணிக்க தொடங்கிவிட்டால் தயாரிப்பாளர் தலையில் துண்டைப் தான் போட்டுக்கொள்ள வேண்டும். சீரியல் நடிகர்கள் தயவு செய்து இனி இப்படி செய்ய கூடாது என அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

வானத்தைப்போல சீரியலில் இருந்து அடுத்தடுத்து இருவர் வெளியேறியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இனி இந்த சீரியலில் சின்ராசு கதாபாத்திரத்தில் யாரடி நீ மோகினி சீரியல் புகழ் ஸ்ரீ அவர்கள் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

திரை பிரபலங்கள் கலந்துகொண்ட “ROCKY” படத்தின் சிறப்பு காட்சி..! | Sathyam Cinemas | Vasanth Ravi | HD

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.