Shocking Details About Chithra Suicide

நடிகை சித்ரா ஏற்கனவே தூக்க மாத்திரை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

Shocking Details About Chithra Suicide : தமிழ் சின்னத்திரை சீரியல் நடிகையாக வலம் வருபவர் சித்ரா. தொகுப்பாளினியாக பல்வேறு சேனல்களில் பணியாற்றியுள்ள இவர் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்னர் இவருக்கும் ஹேம்நாத் ரவி என்பவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்தது. அதன் பின்னர் இரு மாதங்களுக்கு முன்னர் இவர்களுக்கு பதிவு திருமணம் நடைபெற்றுள்ளது.

நடிகை சித்ரா தனக்கென சொந்த வீடு கார் உள்ளிட்டவைகளை வாங்கியதால் கடன் சுமையால் கஷ்டப்பட்டு உள்ளார். இதனால் கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்தி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.

நடிகை சித்ரா குடும்பத்தையும் கவனித்துக் கொண்டு இருந்ததால் அவருக்கு திருமணம் செய்து வக்க அவருடைய தாயார் கொஞ்சம் தயக்கம் காட்டியதாக கூறப்படுகிறது. இருப்பினும் கல்யாண வேலைகள் களைகட்டியுள்ளது.

ஆனால் ஹேம்நாத் திருமண செலவிற்காக எதையும் கொடுக்காததால் சித்ரா மனமுடைந்து உள்ளார். அதுமட்டுமல்லாமல் ஹேம்நாத் சீரியல்களில் நடிக்க வேண்டாம் எனவும் வற்புறுத்தியுள்ளார்.

நிகழ்ச்சிகளில் பங்கேற்று வீடு திரும்பியவுடன் எவனோட ஆடிட்டு வர எனவும் கொச்சையாக பேசியுள்ளார். இறுதியாக ஸ்டார் மியூசிக் ஷூட்டிங்கை முடித்துவிட்டு ரூமிற்கு சென்ற பொழுது இதே பிரச்சனை தான் அரங்கேறியுள்ளது.

பிரச்சினையில் சித்ரா நீ இல்லாமல் என்னால் இருக்க முடியாது என கூறியுள்ளார். ஆனால் அதையெல்லாம் காதில் வாங்காத ஹேம்நாத் செத்து தொலை என தெரிவித்துவிட்டு அறையை விட்டு வெளியேறி உள்ளார்.

இதனால் மனமுடைந்து போன சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என கூறப்படுகிறது. இதற்கு முன்னதாகவும் ஒரு முறை இதுபோன்ற பிரச்சனைகளால் தூக்க மாத்திரை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.