வாரிசு பட வெற்றி அடைய வேண்டும் என கோவிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளார் சோபா சந்திரசேகர்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வரும் பொங்கலுக்கு வாரிசு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

வம்சி இயக்க தமன் இசையமைத்துள்ள இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா உட்பட பல முக்கிய பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி சென்னையில் கோலாகலமாக நடந்து முடிந்தது.

இதனைத் தொடர்ந்து தற்போது விஜயின் அம்மா சோபா சந்திரசேகர் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் அனைவரும் நலமுடன் இருக்க வேண்டும் என வேண்டிக் கொள்ள கோவிலுக்கு வந்ததாக தெரிவித்தார்.

அதோடு விஜயின் வாரிசு திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும் என அனைவரும் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள் என வேண்டுகோள் வைத்தார். மேலும் விஜயின் அடுத்த படம் குறித்து கேட்க விஜய் அடுத்து என்ன படத்தில் நடிக்கிறார்? வாரிசு படத்தில் என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறார்? என எதுவும் எனக்கு தெரியாது. ஆனால் இது ஒரு குடும்பத் திரைப்படம் என்பது மட்டும் தெரியும் என பேசி முடித்தார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.