Sarkar & Shanthanu : இளம் நடிகரும் இயக்குனர் பாக்யராஜின் மகனுமான சாந்தனு அளித்துள்ள பேட்டி ஒன்றில் விஜய் ரசிகர்களை பார்த்தாலே பயமாக இருக்கிறது என கூறியுள்ளார்.
தளபதி விஜய் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர், இவர் முருகதாஸ் இயக்கத்தில் நடித்துள்ள சர்கார் படம் வரும் தீபாவளிக்கு பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.
வருண் ராஜேந்திரன் என்ற உதவி இயக்குனர் சர்கார் படத்தின் கதை என்னுடையது என வழக்கு தொடர்ந்திருந்தார். எழுத்தாளர் சங்கத்திலும் புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரை விசாரித்த பாக்யராஜ் இரண்டு படத்தின் கருவும் ஒன்று தான் என கூறியிருந்தார். முருகதாஸும் ஒப்பு கொண்டிருந்தார்.
பாக்யராஜ் இரண்டு படத்தின் கருவும் ஒன்று என கூறி வந்ததால் ஷாந்தனுவை விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் மோசமாக விமர்சித்து வந்துள்ளனர்.
இதனால் சர்கார் படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க ஆவலாக இருந்தாலும் விஜய் ரசிகர்களை நினைத்தால் பயமாக இருக்கிறது.
அவர்கள் அப்பாவையும் என்னையும் தவறாக புரிந்து கொண்டுள்ளார்கள் என கூறி வருகிறார். மேலும் எது எப்படி இருந்தாலும் சர்கார் படத்தின் முதல் நாள் காட்சியை பார்த்து விடுவேன் எனவும் ட்விட்டரில் கூறியுள்ளார்.