குழந்தையுடன் ஷாப்பிங் சென்றுள்ளார் ரோஜா சீரியல் புகழ் ஷாமிலி சுகுமார்.
தமிழகத்தில் தூத்துக்குடியில் உதயமாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற மிகப்பெரிய கடை வேலவன் ஹைபர் மார்க்கெட். இதனை தொடர்ந்து சில வருடங்களுக்கு முன்னர் சென்னை தி நகரில் உள்ள உஸ்மான் ரோட்டில் ஏழடுக்கு தளத்துடன் புதிய கிளையாக உருவானது வேலவன் ஸ்டோர்ஸ்.
ஆடை, ஆபரணங்கள், அணிகலன்கள், வீட்டு உபயோக பொருட்கள் என அனைத்தும் ஒரே இடத்தில் குறைவான விலையில் நிறைந்த தரத்துடன் கிடைப்பதால் மக்கள் மத்தியில் தொடர்ந்து நன்மதிப்பை பெற்று வருகிறது. சாதாரண மக்களை போலவே திரையுலக பிரபலங்களும் தொடர்ந்து இந்த கடையில் ஷாப்பிங் செய்து வருகின்றனர்.
ரோஜா சீரியல் புகழ் ஷாமிலி சுகுமாரும் ஏற்கனவே இந்த கடையில் ஷாப்பிங் செய்திருந்தார். இந்த நிலையில் தற்போது அவர் தன்னுடைய குழந்தை ரியா மற்றும் கணவருடன் சேர்ந்து ஷாப்பிங் செய்துள்ளார்.
தனக்கும் குழந்தைக்கும் தேவையான ஆடை ஆபரணங்களை எக்கச்சக்கமாக குறைந்த விலையில் வாங்கியுள்ளார். மேலும் தன்னுடைய குழந்தைக்கு தேவையான பொம்மை போன்றவற்றையும் வாங்கியுள்ளார். போகிற போக்கில் தனது கணவருக்கும் சில ஆடைகளை ஷாப்பிங் செய்துள்ளார்.
ஷாப்பிங்கில் குட்டி பாப்பா அலப்பறை செய்து ஷாமிலியை திணற வைத்துள்ளது. இவர்கள் குடும்பத்தோடு ஜாலியாக ஷாப்பிங் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.