இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகத்தில் முக்கிய வேடத்தில் சர்ச்சைக்கு பெயர் போன நடிகை ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.
தமிழ் சினிமாவில் கெளதம் கார்த்திக், யாஷிகா ஆனந்த், வைபவி சாண்டிலா மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் இருட்டு அறையில் முரட்டு குத்து.
படத்தை பார்த்து விட்டு விமர்சனம் சொல்ல கூச்சப்பட்டு முகத்தை மூடிக் கொண்டு ஓடிய இளசுகள் எக்கச்சக்கம்.
இந்நிலையில் தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி அவரே நடிக்க இருக்கிறார் முதல் பாகத்தின் இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார்.
மேலும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் ஷாலு ஷம்மு நடிக்க கமிட்டாகி இருப்பதாக தகவல் ஒன்று பரவி வருகிறது. இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பக்கங்களிலேயே ஓவர் கவர்ச்சி காட்டி வரும் இந்த படத்தில் இன்னும் ஓவர் கிளாமர் காட்டுவாரே என கமன்ட் அடிக்கின்றனர் நெட்டிசன்கள்.