seventy four
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் வசித்து வருபவர் ராஜ ராவ்(80). இவரின் மனைவி எர்ராமட்டி மங்கம்மா (74).

Seventy year old women delivered twin baby – இந்த தம்பதிக்கு கடந்த 1962ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. எனவே, 57 ஆண்டுகளாக அவர்களுக்கு குழந்தை இல்லை. இந்த சோகம் அவர்களை வாட்டி வந்தது.

ஆனாலும், நம்பிக்கை விடாத மங்கம்மா தொடர்ந்து குண்டூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கர்ப்பம் தரிக்க சிகிச்சை பெற்றுவந்தர். அவருக்கு 25 வருடங்களுக்கு முன்பு மாதவிடாய் நின்றுவிட்டதால் கருமுட்டைகள் உருவாக வாய்ப்பில்லை. எனவே, கருமுட்டை தானம் பெற்று, அவரின் கணவரின் உயிரணுவோடு இணைத்து ஊசி மூலம் அவரின் கர்ப்பப்பையில் செலுத்தி மருத்துவர்கள் கருத்தரிக்க வைத்தனர்.

seventy four

இந்நிலையில், மங்கம்மாவுக்கு நேற்று இரட்டை குழந்தைகள் பிறந்தது. மங்கம்மாவும், குழந்தைகளும் நலமாக உள்ளனர். இதன் மூலம் அதிக வயதில் குழந்தை பெற்ற பெண் என்கிற சாதனையை மங்கம்மா நிகழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.