சேது திரும்பவும் சிங்ககுட்டியா பிறந்து இருக்கான் என சேதுராமனின் தந்தை உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
Sethuraman Wife Blessed With Boy Baby : தமிழ் சினிமாவில் கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படத்தின் மூலமாக ரசிகர்களிடையே பிரபலமானவர் சேதுராமன்.
அழகு சார்ந்த மருத்துவமனையை நடத்தி வந்த இவர் கொரானா பரவ தொடங்கியதும் பல்வேறு வீடியோக்களை வெளியிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
இந்த கொரானா பேரிடர் காலத்தில் தான் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்தார். இவருக்கு திருமணமாகி ஏற்கனவே மருமகள் இருந்தது மேலும் இவரது மனைவி இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்தார்.
தற்போது அவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து சேதுராமனின் தந்தை தன்னுடைய முகநூல் பக்கத்தில் சேதுராமனின் மீண்டும் சிங்கக்குட்டி ஆக இருந்து இருப்பான், அவன் தான் மீண்டும் குழந்தையாக வந்துள்ளான் என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
இதனையடுத்து ரசிகர்கள் பலரும் சேதுராமன் மனைவிக்கும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். அவர்களில் குட்டி சேதுவே மீண்டும் பிறந்து இருப்பதாக நம்புகின்றனர்.