Sethupathy 2 : விஜய் சேதுபதி முதல் முறையாக இரண்டாம் பாகம் படத்தில் நடிக்க உள்ளார். இதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் படத்திற்கு படம் வித்தியாசமான நடிப்பாலும் தன்னுடைய இயல்பான குணத்தாலும் மக்கள் செல்வன் என்ற பெயரை பெற்றவர் விஜய் சேதுபதி.
இவரது நடிப்பில் வெளியான பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம், விக்ரம் வேதா, 96 என பல படங்கள் மெகா ஹிட் படங்களாக அமைந்துள்ளன.
ஆனால் இவைகளில் எதுவுமே இரண்டாம் பாகம் உருவாகவில்லை. விஜய் சேதுபதியும் இதுவரை எந்த இரண்டாம் பாகம் படத்திலும் நடிக்கவில்லை.
இந்நிலையில் தற்போது முதல் முறையாக அருண் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி போலீஸ் அதிகாரியாக நடித்து மிரட்டிய சேதுபதி படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த பாகத்திலும் விஜய் சேதுபதியும் அருண் குமாருமே இணைய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் பாகத்தை விட இந்த பாகத்தில் விஜய் சேதுபதி இன்னும் மிரட்டலான போலீசாக நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.