ஒரே நாளில் சந்தானத்தின் இரண்டு படங்கள் ரிலீசாக இருந்த நிலையில் தற்போது ஒரு படம் தள்ளி போயுள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சந்தானம். இவரது நடிப்பில் தற்போது பல படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.
அப்படி தான் இந்த ஜனவரி 31-ல் சந்தானம் நடிப்பில் உருவாகி 2 வருடமாக கிடப்பில் இருந்து வந்த சர்வர் சுந்தரம் திரைப்படமும் விஜய் ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள டகால்டி திரைப்படமும் ரிலீசாக இருப்பதாக அறிவிப்பு வெளியானது.
ஒரே நாளில் இரண்டு சந்தானம் படம் ரிலீசானால் ரசிகர்கள் எதை தேர்தெடுப்பார்கள்? அது இரண்டு படத்தின் வசூலுக்கும் பிரச்சனையாக அமையும் என்ற பேச்சுகள் எழுந்திருந்த நிலையில் தற்போது சர்வர் சுந்தரம் டகால்டிக்கு வழி விட்டுள்ளது.
ஆம் டகால்டி திரைப்படம் திட்டமிட்டபடி வரும் ஜனவரி 31-ம் தேதி ரிலீசாகும். சர்வர் சுந்தரம் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தின ட்ரீட்டாக வெளியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.