Serial Heroine Changes in Tamil : பெரும்பாலான தமிழ் சின்னத்திரை தொடர்களில் கேரளா, கர்நாடகா போன்ற மாநிலத்தை சேர்ந்த நடிகைகள் தான் நாயகிகளாக நடித்து வருகின்றனர்.
கொரோனா பொது ஊரடகத்தினால் வெளிமாநிலத்தில் வந்து நடிக்கும் சீரியல் நடிகர்கள் தங்களது சொந்த மாநிலத்திற்கு சென்று விட்ட நிலையில் தற்பொழுது சீரியலுக்காக படப்பிடிப்பு தொடங்கி நடந்து கொண்டிருக்கிறது.
இந்த சூழ்நிலையில்,சொந்த மாநிலம் சென்ற நடிகர்கள் மீண்டும் சென்னைக்கு வர இயலாத சூழ்நிலை சீரியலின் நாயகிகளை அதிரடியாக மாற்றம் செய்துள்ளனர்.
இந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த “அக்னி நட்சத்திரம்” தொடரில் வில்லியாக “அகிலா” என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த “மெர்சினா”, கேரளாவில் இருந்து சென்னை திரும்ப முடியாத நிலையில் அவருக்கு பதில் வேறு நடிகை இனி நடிப்பார் எனவும் அறிவிப்பு வெளியானது.
இதைதொடர்ந்து ராதிகாவின் “சித்தி-2” சீரியலில் 4 நடிகர்கள் மாற்றம் செய்யப்பட்டதாகவும், பொன் வண்ணணுக்கு பதில் இனி “நிழல்கள் ரவி” நடிப்பார் என்றும் கூறப்படுகிறது.
விஜய் டிவியின், “நாம் இருவர் நமக்கு இருவர்” என்ற தொடரின் இரண்டு கதாநாயகிகளில் ஒருவரான ‘ரக்ஷா’ பெங்களூரிலிருந்து சென்னை திரும்ப முடியாத நிலையில் அவருக்கு பதிலாக ‘ரட்சிதா’ ஒப்பந்தமாகி இருக்கிறாராம்.
இதே போன்று ஜீ தொலைக்காட்சியில் “இரட்டை ரோஜா” தொடரில் இரு வேடங்களிலும் நடித்த ‘ஷிவானி’க்கு பதிலாக சாந்தினி நாயகியாக நடிக்க உள்ளார்.
இந்த ஊரடங்கு தொடர்ந்து நீடித்தால் இன்னும் பல தொடர்களில் உள்ள கதாபாத்திரங்கள் மாற்ற வேண்டிய நிலைக்குத் தள்ளப்படும் என்று சின்னத்திரை நடிகர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதனால் சீரியல் ரசிகர்கள் அனைவரும் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.