சீரியல் நடிகை ஜெயஸ்ரீயின் முதல் கணவருடைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
தமிழ் சின்னத்திரையில் சீரியல்களில் வில்லியாக நடித்தவர் ஜெயஸ்ரீ. இவருக்கு திருமணமாகி ரித்வா என்ற பெயரில் பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் முதல் கணவரை விவாகரத்து செய்து விட்டு சீரியல் நடிகர் ஈஸ்வரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
கடந்த சில வாரங்களாக ஜெயஸ்ரீ தன்னுடைய கணவருக்கும் சீரியல் நடிகை மகாலட்சுமிக்கும் தொடர்பு இருப்பதாக கூறி பல்வேறு குற்றசாட்டுகளை எழுப்பி கூறி வருகிறார்.
மேலும் ஈஸ்வர் எனக்கும் மஹாலக்ஷ்மிக்கும் எந்த தொடர்பும் இல்லை, ஜெயஸ்ரீக்கும் மஹாலக்ஷ்மியின் கணவருக்கும் தான் தொடர்பு உள்ளது. அவர்கள் இருவரும் சேர்ந்து கொண்டு போடும் பிளான் தான் என கூறி வருகிறார்.
மஹாலக்ஷ்மியின் கணவரோ எனக்கு ஜெயஸ்ரீ நீண்ட கால தோழி, ஒரு தங்கை மாதிரி தான் என கூறுகிறார். உண்மையில் இவர்களுக்கு இடையே என்ன தான் பிரச்சனை என இதுவரை தெரியவில்லை.
இந்நிலையில் தான் ஜெயஸ்ரீயின் முதல் கணவர் தன்னுடைய மகள் ரித்வாவுடன் சேர்ந்திருக்கும் வீடியோ ஒன்றும் புகைப்படமும் இணையத்தில் படு வைரலாகி வருகிறது.