செல்லம்மா நாயகன் அர்ணவ்வுடன் செவ்வந்தி நாயகி திவ்யா திருமணம் செய்து கொண்ட சில நாட்களிலேயே கர்ப்பமான மகிழ்ச்சி தகவலை திவ்யா தெரிவித்துள்ளார்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற கேளடி கண்மணி தொடரில் கதாநாயகியாக அறிமுகமானவர் திவ்யா. அதை தொடர்ந்து மகராசி தொடரில் நடித்தவர், தற்போது செவ்வந்தி என்கிற தொடரில் கதாநாயகியாக நடித்து வருகிறார்அதேபோல தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் செல்லமா என்கிற தொடரில் நாயகனாக நடித்து வரும் நடிகர் அர்ணவ். கேளடி கண்மணி தொடரில் நடித்தபோது அதில் கதாநாயகியாக நடித்த நடிகை திவ்யா ஸ்ரீதர் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.

கடந்த ஐந்து வருடங்களாக லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்த இவர்கள் தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளனர். அர்ணவ் முஸ்லிம் என்பதால் இந்து மற்றும் இஸ்லாமிய முறைப்படி தங்களது திருமணத்தை நடத்திய இவர்கள் முறைப்படி பதிவுத் திருமணமும் செய்துள்ளனர். இந்த நிலையில் தான் இரண்டு மாத கர்ப்பமாக இருப்பதாக தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி நடிகை திவ்யா தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

https://www.instagram.com/p/Ci-GJS5PEV2/?igshid=YmMyMTA2M2Y=