முதல் இரவில் நடந்த விஷயங்கள் குறித்து சம்யுக்தா பேட்டிக்கு பதிலடி கொடுத்துள்ளார் விஷ்ணுகாந்த்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சிப்பிக்குள் முத்து என்ற சீரியலில் இணைந்து நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்கள் விஷ்ணுகாந்த், சம்யுக்தா. இந்த சீரியல் மூலம் காதல் வயப்பட்ட இவர்கள் திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் இணைந்தனர்.

ஆனால் ஒரே மாதத்தில் இருவரும் பிரிந்து ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர். சம்யுக்தா தொடர்ந்து விஷ்ணுகாந்த் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்து நிலையில் விஷ்ணு தான் தன்னுடன் காதலில் இருக்கும் போதே சக நடிகர் ரவியுடன் சம்யுக்தா காதலுடன் பேசி வந்த விஷயத்தை ஆதாரத்துடன் வெளியே விட்டார்.

இதையடுத்து சம்யுக்தா விஷ்ணுகாந்த் முதல் இரவில் மாத்திரை போட்டு உறவு வைத்துக் கொண்டதாகவும் அவருக்கு 24 மணி நேரமும் செக்ஸ் தான் தேவை எனவும் பேசி இருந்தார். அது மட்டுமல்லாமல் முதல் இரவு அரங்கில் கேமராவை ஆன் செய்து வைத்திருந்ததாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.

இதற்கெல்லாம் விஷ்ணுகாந்த் பதிலடி கொடுத்துள்ளார். அதாவது சம்யுக்தா காதல் என்ற பெயரில் தன்னை நன்றாக ஏமாற்றி விட்டார். நான் மாத்திரை எடுத்துக் கொண்டு 24 மணி நேரமும் இரவு வைத்துக் கொள்ள வேண்டும் என டார்ச்சர் செய்ததாக சொல்வது முழுக்க முழுக்க பொய்யான ஒன்று. என்னுடைய உடலை பரிசோதனை செய்து கூட பாருங்கள் அதற்கு நான் தயார் என தெரிவித்துள்ளார்.

சம்யுக்தா குறித்த ஆடி ஆதாரங்களை வெளியிட்டதால் அவர் என்னை பழி வாங்குவதற்காக இப்படி எல்லாம் பேசி வருகிறார். அவர் ஏற்கனவே ரவியுடன் உடலுறவு வைத்துக் கொண்டதைப் பற்றி அவருடைய அம்மாவே பேசியுள்ளார். ஆனால் தற்போது வரை அவர் நான் தினமும் வெர்ஜீனாக தான் இருக்கிறேன் என சொல்லி வருகிறார்.

இதிலிருந்து சம்யுக்தா எவ்வளவு பொய்களை சொல்லி வருகிறார் என்பதை நீங்களே தெரிந்து கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.