Sengottaiyan Speech :
சென்னை: நாடே திரும்பி பார்க்கும் வகையில் கள்விக்கொள்கையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
இந்தியாவே வியக்கத்தக்க அளவுக்கு பள்ளிக்கல்வியில் பாட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்று அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார்.
சென்னை ராயபுரத்தில் இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன்,
‘அரசு நீட் தேர்வு பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற மாணவர்களில் ஒருவர் கூட தேர்வாகவில்லை என்ற செய்தி முற்றிலும் தவறானது.. 2 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நாடே திரும்பி பார்க்கும் வகையில் கல்விக்கொள்கையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது’ என்று கூறினார்.
மேலும் நீட் தேர்வு தமிழகத்தில் இருக்கக்கூடாது என்பது அரசின் கொள்கையாக உள்ளது. 6 ஆம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள 7,500 பள்ளிகளில் செப்டம்பர் மாதம் இறுதிக்குள் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்படும்.
இந்தி எந்த வடிவில் வந்தாலும் தமிழ்நாடு ஏற்காது: அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி.!!
+2 முடிந்தவுடன் மாணவ – மாணவிகளுக்கு சிஏ தேர்வு எழுதுவதற்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்நிலையில் அடுத்த மாதம் 15-ம் தேதிக்கு பிறகு அரசுப் பள்ளிகளில் ஆங்கில பயிற்சி அளிக்கப்படும்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன், இருமொழி கொள்கை என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. அரசுப் பள்ளிகளில் கூடுதலாக 1.65 லட்சம் மாணவ மாணவிகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் டியூஷன் எடுக்கும் ஆசிரியர்களுக்கு ராதாகிருஷ்ணன் விருது கிடையாது, விருதுக்கான 17 விதிமுறைகளை வெளியிட்டு பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடதக்கது.