செம்பருத்தி

செம்பருத்தி : பார்வதி மணல் கடிகாரத்தை திருப்பி வைத்து மணல் சரிவதற்குள் ஆதி வருவாரா என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறாள்.

அப்பொழுது ஆதியை நினைத்து தன்னையறியாமல் பேசிக் கொண்டிருக்கிறாள். பார்வதியின் முன் ஆதி திடீரென்று வந்து நிற்கிறார்.

அப்பொழுது பார்வதி மணல் கடிகாரத்தை திருப்பி வைத்தது உங்களுக்கு எப்படித் தெரியும்? நீங்கள் எப்படி வந்தீர்கள் என்று கேட்கிறாள்.

அதற்கு ஆதி அலாவுதீன் விளக்கு போல இந்த மணல் கடிகாரம். நீ திருப்பி வைத்த நான் உடனே வந்துவிடுவேன் என்கிறார்.

பிறகு ஆதி பார்வதியிடம் நான் நேரில் இல்லாத பொழுது அவ்வளவு அன்பாக பேசுகிறாய். ஆனால் நேரில் வந்த உடன் தயக்கத்துடனும், ஒருவித பயத்துடன் நிற்கிறாய் ஏன்? என்று கேட்கிறார்.

அதற்கு பார்வதி என்னுள் இருக்கும் ஒருவித பயம் தான் காரணம் அது தவிர வேறு ஒன்றுமில்லை என்று கூறுகிறார். திடீரென்று சுந்தரம் பார்வதியும் ,ஆதியும் ஒன்றாக இருப்பதை பார்த்து விடுகிறார்.

அவர் பார்க்கும் பொழுதே வீட்டிலுள்ள கரண்ட் திடீரென்று ஆஃப் ஆகி விடுகிறது. கரண்ட் வந்தவுடன் பார்த்தால் பார்வதி மட்டும் தனியாக நிற்கிறாள்.

சுந்தரம் நாம் தான் ஏதோ தவறாகப் பார்த்து விட்டோமா என்று குழம்பிச் சென்று விடுகிறார். ஆதி வெளியே சென்றால் அங்கு ஷியாம் நின்று கொண்டிருக்கிறார்.

ஆதியிடம் நான் உன்னை காப்பாற்றவே இங்கு வந்தேன் நீயும் பார்வதியும் ஒன்றாக இருக்கும் போது கரண்ட் ஆஃப் ஆகியது அல்லவா அதற்கு நான் தான் காரணம் என்று சொல்கிறார்.

மறுநாள் பார்வதி ஐஸ்வர்யா, வனஜா அம்மாவிற்கு ஜூஸ் கொண்டு வந்து கொடுக்கிறார். அப்போது வீட்டிற்கு தொழிலதிபர் ஒருவர்காலில் செருப்புடன் வந்துவிடுகிறார்.

அப்பொழுது பார்வதி அவரிடம் வீட்டில் கொலு வைத்துள்ளோம் செருப்பை வெளியே கழற்றும் படி கூறுகிறாள்.

அதற்கு அந்த தொழிலதிபர் நீ கொண்டு போய் என் செருப்பை வெளியே வைத்து விடு என்கிறார். அதை பார்த்த அகிலா, கோபத்தில் அவரை வெளியே செல்லும் படி கூறுகிறாள்.

இதனால் அகிலாவுக்கு 150 கோடி வருமானம் உள்ள தொழில் கைக் கூடாமல் போய் விடுகிறது.

அகிலா அந்த தொழிலதிபரிடம் பார்வதி வேலைக்காரி அல்ல. இந்த குடும்பத்தில் ஒருத்தி என்று கூறுகிறார். வனஜா, பார்வதியிடம் போட்ட சவாலில் ஜெயிப்பதற்காக பாதாம் அல்வாவில் தூக்க மாத்திரையை கலந்து விடுகிறார்.

பார்வதி அந்த அல்வாவை சாப்பிட்டு, தூக்க கலக்கத்தால் வேலை செய்யாமல் அகிலாவின் கோபத்திற்கு ஆளாகுவாளா ? வனஜா சவாலில் ஜெயிப்பாளா?. அடுத்தப் பகுதியில் பார்க்கலாம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.