Sembaruthi 29.10.18 : அம்பாளுக்கு சொர்ணபிஷேகம் நடைபெற்ற பின் அனைவரது நகைகளையும் திருப்பிக் கொடுக்கும்போது, பார்வதியின் செயின் தவறி பாலில் விழுந்து விடுகிறது.
பாலில் விழுந்த செயினை வனஜாவிடம் கொடுத்து சுத்தம் செய்து வரும்படி அகிலா கூறுகிறார்.
வனஜா, செயினை சுத்தம் செய்யும்போது லாக்கெட்டை திறந்தபடி வைக்க முயற்சி செய்கிறாள்.
அப்போது , அருண் கலசத்துடன் வந்து நின்று தனது சித்தியிடம் என் போன் கீழே விழுந்துவிட்டது எடுத்து தரும் படி கேட்கிறார்.
வனஜா சலிப்புடன் வந்து எடுத்துக் கொடுக்கிறார். அந்த சமயம் ஷியாம், வனஜாவிடம் இருந்த செயினை எடுத்து விட்டு டூப்ளிகேட் செயினை வைத்து விடுகிறார்.
இதை அறியாத வனஜா அந்த செயினை எடுத்துக்கொண்டுபோய் அகிலாவிடம் கொடுத்து விடுகிறார். அகிலா லாக்கெட்டை திறந்து, தனது அப்பாவை பார்த்து மனதார வேண்டிக் கொள்கிறாள்.
வனஜா, ஐஸ்வர்யா இருவரும் திருதிருவென்று முழிக்கின்றனர்.
வனஜா தான் வைத்திருந்த போலி செயினை தான் யாரோ ஒருவர் மாற்றி உண்மையான பரம்பரை செயினை எடுத்திருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்கிறார்.
பூஜை முடிந்தவுடன் ஊழியர்கள் அனைவருக்கும் போனஸ் தருவதற்காக தயாராகிறாள். அகிலா ஆதியிடம் பணத்தை ஆபீஸ் மேனேஜரிடம் டிரான்ஸ்பர் செய்யுமாறு சொல்கிறாள்.
ஆனால் பணம் ட்ரான்ஸ்பர் ஆகவில்லை. ஃப்ரீஸ் செய்யப்பட்டு உள்ளதாக கூறுகிறார் ஆதி. அகிலா உடனே பேங்க் மேனேஜரிடம் சென்று விவரத்தைக் கேட்டு அறியுமாறு ஆதியையும், அருணையும் அனுப்பி வைக்கிறார்.
இருவரும் பேங்க் மேனேஜரை சந்தித்து நடந்த விவரங்களை கேட்கின்றனர் .
அதற்கு மேனேஜர் கம்பெனி எம்டி தான் பணம் ட்ரான்ஸ்பர் நிறுத்தி வைக்க வேண்டும் என்று கடிதம் மூலமாக எழுதிக் கொடுத்திருக்கிறார் என்று கடிதத்தை காட்டுகிறார்.
ஆனால் அருண் அதை மறுக்கிறார். நான் தான் கம்பெனி எம்டி நான் அதுபோல ஒரு கடிதத்தை அனுப்ப வில்லை என்கிறார். சரி இப்பொழுது நான் சொல்கிறேன் ,
மீண்டும் பண பரிமாற்றத்தை துவங்கலாம் என்று கூறுகிறார்.
பேங்க் மேனேஜர் மறுக்கிறார்.நீங்கள் மீண்டும் ஒரு கடிதத்தை எழுதி கொடுத்தால் தான் அதை மும்பை உள்ள தனது தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி ஒப்புதல் வாங்கி தான் பண பரிமாற்றம் நடக்கும் என்கிறார்.
மும்பையில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு போன் மூலமாக தகவல் தெரிவித்தால் கூட உங்களது பணபரிமாற்றம் செய்ய 6 மணிநேரம் ஆகும் என்கிறார்.
ஆதியும் அருணும் கவலை தோய்ந்த முகத்துடன் வீட்டிற்கு செல்கிறார்கள்..அங்கு அகிலா ஆர்வமாக காத்து கொண்டு இருக்கிறாள்.
நாளைய எபிசோட்டில் ஊழியர்களுக்கு போனஸ் தராமல் அவமானப்படுவாரா அகிலா? வனஜா, நந்தினியின் திட்டம் ஜெயித்ததா ? நாளை பார்க்கலாம்