இன்றைய எபி- சோட்டில் பார்வதியும், ஆதியும் கணவன் – மனைவி என்று தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இனி நேற்றைய எபிசோட் பற்றி பார்க்கலாம்.
மருத்துவ மனையில் பிரசவமான குழந்தையையும், தாயையும் பார்க்க வரும் அகிலா, அறையை திறக்கிறார் அங்கு பார்வதி காயத்துடன் படுத்திருப்பதை பார்க்கிறாள்.பின் ஆதியிடம் பார்வதியை பற்றி விசாரிக்கிறார்.
அதற்கு ஆதி, எனக்கு போனில் ஒருவர் பார்வதியை பற்றி தகவல் சொன்னார்கள் அதான் இங்கு மருத்துவமனைக்கு வந்தேன் என்றார். எந்த சலசலப்பும் இல்லாமல் வெளியே வந்த அகிலா, வனஜாவை கன்னத்தில் ப்ளார் -ப்ளார் என்று அறைந்தார்.
வனஜாவுக்கு ஒன்றும் புரியவில்லை . அப்பொழுது அகிலா, நீ ஆளை வைத்து பார்வதியை கொலை செய்ய முயற்சி செய்திருக்கிறாய். என்ன தைரியம் உனக்கு என்று சொல்லி கத்துகிறார். வனஜா இந்த கதை புதியதாக உள்ளதே, நான் ஆள்வைத்து அடிக்கவில்லையே என்று மனதில் புலம்புகிறார்.
அனைவரும் வீடு திரும்புகின்றனர். பார்வதியை பார்த்த அருண், ஏன் இப்படி செய்தீர்கள், என்ன தைரியம் செயினை கழட்டி வைத்தது மட்டும் அல்லாமல் வீட்டை விட்டு வேற சென்றிருப்பீர்கள் ? என்று பொய்யாக கோபப்படுவதாக நடிக்கிறார் அருண்.
அகிலா, உமாவிடம் பரம்பரை செயினை கொண்டு வா என்கிறார். செயினை பார்வதி கழுத்தில் போடும் பொழுது சுந்தரம் வந்து தடுத்து விடுகிறார். பரம்பரை செயினை பற்றிய அருமை தெறியாதவளுக்கு, ஏன் ? மீண்டும் செயினை போடுகிறீர்கள். பார்வதியை நான் ஊரில் விட்டு விட்டு வருகிறேன். அவள் அங்கேயே இருக்கட்டும் என்கிறார் சுந்தரம்.
ஆனால் அகிலா மறுக்கிறாள். பார்வதிக்கும், என் குடும்பத்திற்கும் ஏதோ தொடர்பு உள்ளது என்று நினைக்கிறேன். அவள் மீது எந்த தவறும் இல்லை என்கிறார். சுந்தரம் அதை கேட்டதும் அமைதியாக சென்று விடுகிறார். ஆதி – பார்வதியிடம் சைகையில் பேசுகிறார். அதைப் பார்க்கும் வனஜா கனலாய் கொதிக்கிறார்.
பிறகு ஆதி,, வனஜாவிடம் புதினா டீ கேட்கிறார். அதற்கு வனஜா எனக்கு போட தெரியாது, எல்லாம் அந்த சமையல் காரிக்கு தான் தெரியும் என்கிறார். பார்வதி டீபோட்டு ஆதியின் அறைக்கு கொண்டு செல்கிறார். அங்கு ஆதி, என் அறைக்கு வரும் பொழுது என் மனைவியாக தாலி வெளியே தெரியும்படி வா என்கிறார். பார்வதி தாலியை வெளியே தெரியும்படி போடுகிறாள். இருவரும் ஒன்றாக சேர்ந்து செல்பி எடுக்கின்றனர்.
ஆதியின் அறையை நோக்கி சந்தேகத்துடன் பார்க்க வருகிறார் வனஜா. தாலியுடன் இருக்கும் பார்வதியை வனஜா பார்த்து விடுவாளா? பார்வதி தாலியுடன் இருக்கும் போட்டோவை அகிலா பார்த்து விடுவாளா? என்பதை அடுத்தப் பகுதியில் பார்க்கலாம்.