பிராண்ட் அம்பாசிடர் போட்டிக்காக செம்பருத்திக்கு ஆபீஸில் பயிற்சி கொடுக்க வேண்டும் என்று முடிவெடுக்கிறார் ஆதி.

பார்வதிக்கு ஆபீஸில் பயிற்சி கொடுப்பதற்காக அகிலாவிடம் சம்மதத்தையும், போட்டிக்காக வாழ்த்துகளையும் பெறுகிறார் ஆதி.

அகிலாவும் வாழ்த்துக்களை தெரிவித்து தன் அறைக்கு சென்று விடுகிறார். அம்மாவை சமாளிப்பதற்காகவும் ,பார்வதியை சந்திப்பதற்காக நீங்கள் அருமையாக ப்ளான் செய்து இருக்கிறீர்கள் என்று ஆதியை அருண் பாராட்டுகிறார்.

ஆனால், இது நான் ஏற்கனவே முடிவெடுத்த விஷயம் தான் என்று கூறுகிறார் ஆதி. ஏனென்றால் பார்வதியை சுந்தரம் அவர்கள் கிராமத்திற்கு அழைத்து செல்வதற்காக தயாராக இருந்தார்.

பார்வதியை அதிலிருந்து காப்பாற்றவே நான் இவ்வாறு செய்தேன் என்று உண்மையை கூறுகிறார் ஆதி. இவர்கள் அனைவரும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அகிலா திடீரென்று வந்து விடுகிறார்.

அருண் தான் பேசியதை அம்மா கேட்டிருப்பார்களோ என்ற சந்தேகத்தில் இருக்கின்றார். அகிலா அருணை அழைத்து என் அறைக்கு வா என்று கூறி போய் விடுகிறார்.

அருண் ஒரு வித பயத்துடனே அகிலாவின் அறைக்கு செல்கிறார். ஆனால் அங்கு அங்கு நடந்தது பாசப் போராட்டமே தவிர வாக்குவாதம் அல்ல.

அகிலா அருணிடம் நான் உனக்கு சாப்பாடு ஊட்டி விட வேண்டும் என்ற ஆசையாக இருந்தது. அதனால் தான் உன்னை அழைத்தேன் என்று பாசத்துடன் கூறுகிறார்.

அருண் உன்னை திருமணத்திற்கு முன்பு அடித்தது வேறு. ஆனால் திருமணமான பின் அதுவும் மித்ராவின் கண்ணெதிரே உன்னை அடித்தது என் மனதிற்கு மிகவும் வருத்தமாக உள்ளது என்று கூறி அகிலா கண் கலங்குகிறார்.

ஆனால் அருண் அகிலாவிடம் நீங்கள் மித்ராவை வைத்துக் கொண்டு ஆதியை நீங்கள் கோபமாக பேசியது தான் என் மனதிற்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது என்று கூறி அந்த அறையிலிருந்து சென்று விடுகிறார்.

இதற்கிடையில் மித்ரா, நந்தினியை சந்திக்க நந்தினியின் இல்லத்திற்கு வருகிறாள். மித்ரா நந்தினியிடம் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில், நான் போட்ட திட்டம் தோல்வியடைந்தது. என்னால் அகிலாவின் மருமகள் என்று பத்திரிக்கையாளர்கள் எதிரில் கூற முடியவில்லை. அதை அருண் தடுத்து விட்டான் என்று கூறுகிறார்.

அதற்கு என்ன பரவாயில்லை. இப்போது நான் போடும் திட்டத்திலிருந்து அகிலா தப்பிக்க முடியாது என்று கூறுகிறார் நந்தினி.

இருவரும் சேர்ந்து சதி திட்டம் தீட்டுகின்றனர். அகிலா கூறிய வார்த்தைகளை நினைத்து, வருத்தத்தில் தோட்டத்தில் அமர்ந்திருக்கும் பார்வதியை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்குகிறார் ஆதி.

ஆதி தோட்டத்திலும் மின்னிக் கொண்டிருக்கும் மின்மினிப் பூச்சிகளைப் பிடித்துக் கொண்டு பார்வதியின் முகத்தருகே மின்மினிப் பூச்சிகளை பறக்க விடுகிறார். பார்வதி மின்மினிப் பூச்சிகளின் அழகினை கண்டு மகிழ்கிறார்.

ஆதி பார்வதியிடம் அம்மா குறித்த தேதியில் நான், உன் கழுத்தில் தாலி கட்டுவது நிச்சயம் என்று கூறி மீண்டும் தைரியப்படுத்தி வாக்களிக்கிறார்.

இன்றைய எபிசோட்டில் ஆதி! நந்தினி, மித்ராவின் சதி திட்டத்தை முறியடிப்பாரா? அகிலா ஆதியின் காதலை ஏற்ப்பார்களா? அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.