Selvaraghavan talks about NGK :
என்.ஜி.கே திரைப்படத்தில் நிறைய விஷயங்கள் ஒளிவுமறைவாக உள்ளது அதை நன்றாக கவனித்தால் புரியும் என கூறியுள்ளார் மேலும் படத்தை பாராட்டிய அனைவருக்கும் நன்றி என்றும் அவர் கூறியுள்ளார்.
செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா அரசியல்வாதியாக நடிக்கும் படம் என்.ஜி.கே.
இது தளபதியின் மாதம் – இணையத்தை தெறிக்கவிடும் ரசிகர்கள்!
நீண்ட இடைவெளிக்குப் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகும் படம் என்பதாலும், முதல்முறையாக செல்வா -சூர்யா கூட்டணி இணைவதாலும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது.
யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள பாடல்கள் அதன் உள்ளடக்கத்திற்காக ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
இதைத்தொடர்ந்து மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இத்திரைப்படம் நேற்று திரைக்கு வந்தது. ஆனால் ரசிகர்களிடம் இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது.
குறிப்பாக பலரும் இப்படம் புரியவில்லை என்றும் இதன் கதாப்பாத்திரங்களில் தெளிவு இல்லை என்றும் கூறியிருந்தனர் இதற்கு தற்போது இயக்குனர் செல்வராகவன் பதிலளித்துள்ளார்.
ட்விட்டரில் இது குறித்து ட்வீட் செய்த அவர் என்.ஜி.கே திரைப்படத்தில் நிறைய விஷயங்கள் ஒளிவுமறைவாக உள்ளது அதை நன்றாக கவனித்தால் புரியும் என கூறியுள்ளார் மேலும் படத்தை பாராட்டிய அனைவருக்கும் நன்றி என்றும் அவர் கூறியுள்ளார்.
Thanks for the overwhelmimg support & love for #NGK Grateful.The love have shown is truly remarkable. And as some you guessed, the character of #NGK has lot of hidden layers & secrets. It’s easy to find when you watch the film closely. Enjoy the film with family and friends!
— selvaraghavan (@selvaraghavan) June 1, 2019