அடுத்த படம் பற்றி அதிரடியாக அறிவித்துள்ளார் இயக்குனர் செல்வராகவன்.
Selvaraghavan Next Movie Update : தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் செல்வராகவன். இவரது படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு உண்டு.
துள்ளுவதோ இளமை திரைப்படம் முதல் என் ஜி கே திரைப்படம் வரை அனைத்து படங்களையும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.
அதிலும் ஆயிரத்தில் ஒருவன், புதுப்பேட்டை ஆகிய திரைப்படங்கள் அடுத்த பாகம் எப்போது வரும் என்கிற அளவிற்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தின.
இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு செல்வராகவன் கலந்து கொண்ட கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் தன்னுடைய அடுத்த படம் புதுப்பேட்டை இரண்டாம் பாகம் தான் என தெரிவித்துள்ளார்.
அந்த படத்திற்கான கதை எழுதும் பணியிலும் அவர் ஈடுபட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் செல்வராகவனுடன் இணைந்து தனுஷூம் இப்படத்திற்கு கதை எழுதி இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இதனால் புதுப்பேட்டை படத்தின் இரண்டாம் பாகம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தனுஷ் மற்றும் செல்வராகவன் கதையில் இது கொண்டாடக் கூடிய படமாக இது இருக்கும் என எதிர்பார்க்கலாம்.