செல்வராகவனின் லேட்டஸ்ட் தத்துவம் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி இயக்குனராக வலம் வருபவர் செல்வராகவன். தனித்துவமான கதைகளை இயக்கி தனக்கென தனி இடம் பிடித்திருக்கும் இவர் தற்போது இயக்குனராக மட்டுமின்றி நடிகராகவும் பல படங்களில் நடித்து அசத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வரும் செல்வராகவன் அவ்வப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் தனது அனுபவத்தில் கற்றுக்கொண்ட சில விஷயங்களை தத்துவங்களாக எடுத்துரைத்து ட்விட் செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

அந்த வகையில் அவர் தற்போது, “அவர் சொல்கிறார் என கொஞ்சம் , இவர் சொல்கிறார் என கொஞ்சம் என்று நம்மை நாம் மாற்றிக் கொண்டே போனால் இறுதியில் மண்டை ஓடு கூட மிஞ்சாது. கல்லறையில் பொறிக்கும் எழுத்துகளில் கூட நீ நீயாகத்தான் இருக்க வேண்டும்”. என ட்விட் செய்திருக்கிறார். இவரது இந்த கருத்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வைரலாகி வருகிறது.