Selvaraghavan Emotional Tweet :
சூர்யா, என்.ஜி.கே கதாபாத்திரமாகவே வாழ்ந்ததாகவும் அவருக்கு என்றென்றும் தான் கடமைப்பட்டு உள்ளதாகவும் கூறியுள்ளார்.
செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா அரசியல்வாதியாக நடிக்கும் படம் என்.ஜி.கே.
அஜித்தின் இந்த வசனத்தை எப்ப கேட்டாலும் புல்லரிக்கும் – வைரலாகும் நேர்கொண்ட பார்வை நடிகரின் டிவீட்!
நீண்ட இடைவெளிக்குப் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகும் படம் என்பதாலும், முதல்முறையாக செல்வா -சூர்யா கூட்டணி இணைவதாலும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது.
யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள பாடல்கள் அதன் உள்ளடக்கத்திற்காக ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
இதைத்தொடர்ந்து மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இத்திரைப்படம் அண்மையில் திரைக்கு வந்தது. ஆனால் ரசிகர்களிடம் இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது.
எனினும் இயக்குனர் செல்வராகவன் இப்படம் தனக்கு மகிழ்ச்சியளிப்பதாக பேட்டிகளில் கூறி வருகிறார் இதுபோக தற்போது சூர்யா குறித்தும் டிவிட்டரில் அவர் பதிவொன்ற வெளியிட்டுள்ளார்.
அதில் சூர்யா, என்.ஜி.கே கதாபாத்திரமாகவே வாழ்ந்ததாகவும் அவருக்கு என்றென்றும் தான் கடமைப்பட்டு உள்ளதாகவும் கூறியுள்ளார்.