Selvaraghavan About Comparison
Selvaraghavan About Comparison

இருப்பதிலேயே மிகப் பெரிய வியாதி இதுதான் என உருக்கமாக செல்வராகவன் பதிவிட்டுள்ளார்.

Selvaraghavan About Comparison : தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் செல்வராகவன். ஆயிரத்தில் ஒருவன், புதுப்பேட்டை, செவன் ஜி ரெயின்போ காலனி இன்றுவரை பேசக்கூடிய படங்களாக இயக்கியவர்.

இவர் இறுதியாக இயக்கிய என் ஜி கே என்ற படத்தில் இடம் பெற்றுள்ள ரகசியங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டவையாக அமைந்திருந்தன.

மேடை மேல ஒரு பேச்சு கீழ ஒரு பேச்சு விஜய், விஜய் சேதுபதியை மறைமுகமாக விளாசிய சர்ச்சை இயக்குனர் – வைரலாகும் சர்ச்சை பதிவு!

மேலும் தற்போது தன்னுடைய அடுத்தடுத்த படங்களின் கதைகளை எழுதி வருகிறார். அடுத்ததாக தனுஷை வைத்து புதுப்பேட்டை படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளார்.

மேலும் இவர் சமீபத்தில் தான் ஒரு மாற்றுத்திறனாளி என்பதை பலரும் சிறு வயதில் கிண்டலடித்தது குறித்தும் அதில் இருந்து மீண்டு ஒரு வெற்றியாளராக தனித்துவம் கொண்டது குறித்தும் பதிவிட்டிருந்தார்.

இதனையடுத்து தற்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இருப்பதிலேயே மிகப் பெரும் வியாதி மற்றவர்களுடன் நம்மை ஒப்பிட்டுக் கொண்டே வாழ்வது தான். அது நிம்மதியை அடியோடு ஒழித்து விடும். கடவுள் யாரையும் குறைத்துப் படைப்பதில்லை. நான் மிகச் சிறந்தவன் என்பதை எப்பொழுதும் நினைப்போம் என்ன கூறியுள்ளார்.

எம்ஜிஆர், காமராஜரைப் போல ரஜினியால் மட்டுமே உதவ முடியும் – பிரபல இயக்குனர் பரபரப்பு பதிவு!

செல்வராகவனை இந்தப் பதிவைப் பார்த்த ரசிகர் ஒருவர் @selvaraghavan புதுப்பேட்டையில் பிறந்து, 7ஜி ரெயின்போ காலனியில் வளர்ந்து, இரண்டாம் உலகம் சென்ற, ஆயிரத்தில் ஒருவனாய் சினிமா ரசிகர்களை மயக்கம் அடைய செய்த நந்த கோபால குமரனின் #புதுப்பேட்டை 2 க்கு காத்து கொண்டு உள்ளோம்… #சோழர் பயணமும் தொடர வேண்டுகிரோம் என பதிவிட்டு அவரின் திறமையை பாராட்டி உள்ளார்.

https://twitter.com/Subash2591/status/1264070728107716609?s=19

சூர்யா ரசிகர் ஒருவர் என் ஜி கே படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சிகளை ரிலீஸ் செய்யுமாறு கோரிக்கை வைத்துள்ளார்.

நீங்கள் ஊக்கப்படுத்துவது எங்களை அடுத்த கட்டத்திற்கு அமையட்டும் என தனுஷ் ரசிகர் ஒருவர் செல்வராகவனும் தனுஷின் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பதிவிட்டுள்ளார்.

https://twitter.com/kaar_the_k_n_r/status/1264074608333844485?s=19

எஸ் ஜே சூர்யாவை வைத்து ஹரி இயக்கியுள்ள நெஞ்சம் மறப்பதில்லை என்ற திரைப்படம் ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் இருந்து வருகிறது. இதனை தியேட்டரில் ரிலீஸ் செய்யவில்லை என்றாலும் நேரடியாக OTT வழியிலாவது ரிலீஸ் செய்யுங்கள் என ரசிகர் ஒருவர் கூறியுள்ளார். மேலும் அவர் யுவன் சங்கர் ராஜா இசைக்காக காத்துக் கொண்டிருப்பதாக கூறியுள்ளார்.

செல்வராகவன் பதிவிற்கு ரஜினி ரசிகர் ஒருவர் #ரஜினி_ஒரு_சகாப்தம்
கரெக்ட்டா சொன்னீங்க செல்வா சார் ஆனா இதை மக்கள் தலைவர் ரஜினி 30வருஷத்துக்கு முன்னமே சொல்லிட்டாருங்க சார்🙏
#ரஜினிநல்லமனிதர் என பதிவிட்டுள்ளார்.

இன்னும் பல ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து உள்ளனர்.