இயக்குனர் செல்வராகவன் பகிர்ந்திருக்கும் அனுப்புவ பதிவு வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி இயக்குனராக வலம் வருபவர் செல்வராகவன். தனித்துவமான கதைகளை இயக்கி தனக்கென தனி இடம் பிடித்திருக்கும் இவர் தற்போது இயக்குனராக மட்டுமின்றி நடிகராகவும் பல படங்களில் நடித்து அசத்தி வருகிறார். அந்த வகையில் அவரது நடிப்பில் மோகன் ஜி இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான பாகாசூரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

அதனை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வரும் செல்வதாகவன் அவ்வப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் தனது அனுபவத்தில் கற்றுக்கொண்ட சில விஷயங்களை ட்விட் செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது, “உலகம் பிறந்த நாள் முதல் கடவுள் யாரையும் கரை சேர்க்க தவறியதே இல்லை. எல்லாம் உங்களின் நம்பிக்கையை பொறுத்தது. எந்த சூழ்நிலையையும் எதிர்கொண்டு மீள்வோம் என முழு மனதாய் நம்புவோம். அதில் என்ன குறைந்து விடப் போகிறோம்.” என நம்பிக்கையுடன் வாழ்வது குறித்து ட்வீட் செய்துள்ளார்.