Seetha lakshmi : 300 படங்களில் நடித்தும் வறுமையில் வாடி வந்த பழம் பெரும் நடிகை சீதா லக்ஷ்மி உயிரிழந்தது திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் சிவாஜி, எம்.ஜி ஆர், ஜெயலலிதா, ரஜினிகாந்த், தனுஷ் என பல நடிகர்களின் படங்களில் நடித்தவர் பழம் பெரும் நடிகையான சீதா லட்சுமி.
இதுவரை சுமார் 300-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். அப்படியிருந்தும் உதவிக்கு யாரும் இல்லாமல் கடும் வறுமையில் வாடி வந்தார்.
சென்னை நெற்குன்றத்தில் வாழ்ந்து வந்த இவர் 87 வயதான நிலையில் உடல் நல குறைவால் உயிரிழந்துள்ளார். இவரது மரணம் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவர் தனுஷுடன் சீடன் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.