பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுவது குறித்து மத்திய அரசு விளக்கம் கொடுத்துள்ளது.
Schools Reopen Details in India : சீனாவில் உருவாக்கிய கொரானா வைரஸ் தாக்கம் இந்தியாவில் அதிகமாக பரவி வருகிறது.
இதுவரை இந்தியாவில் ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்து வருகிறது.
இதனால் பள்ளி, கல்லூரிகள் இழுத்து மூடப்பட்டுள்ளன. ஊரடங்கு தளர்வு கல் கொஞ்சம் கொஞ்சமாக அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் பள்ளி கல்லூரிகளை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்து இருப்பதாக தகவல்கள் பரவின.
தமிழகத்தில ஆகஸ்ட் மாதம் முதல் பள்ளி கல்லூரிகளைத் திறக்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்பட்டு வந்தது.
ஆனால் பள்ளி கல்லூரிகளை திறக்க இன்னும் முடிவு செய்யப்படவில்லை என மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
இதனால் பள்ளி கல்லூரிகளை திறக்கப்படும் நாள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என தெரியவந்துள்ளது.