தளபதி 64 படக்குழு அராஜகம் செய்து படப்பிடிப்பை நடத்தியதாக பள்ளி ஆசிரியர் ஒருவர் பரபரப்பான குற்றசாட்டை முன்வைத்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விஜய் 64. லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் பூந்தமல்லி அருகே பார்வையற்றோர் பள்ளியில் நடத்தினர்.
இது குறித்து பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் என்ற பெயரில் ஒருவர் பதிவு ஒன்றை பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
பொதுவாக எங்கள் பள்ளியில் எந்தவித படப்பிடிப்பையும் நடத்த அனுமதி இல்லை. ஆனால் நீங்கள் அரசியல் செல்வாக்குகளை பயன்படுத்தி படப்பிடிப்புகளை நடத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் யாரும் உள்ளே வராதபடியும் வெளியே செல்லாத படியும் மூன்று நாட்களாக பள்ளிக்கும் பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கும் பெரிய தொந்தரவாக படக்குழுவினர் நடந்து கொண்டதாக கூறியுள்ளனர்.
இதோ அந்த பதிவை நீங்களே பாருங்க