பள்ளித் தேர்வில் மாஸ்டர் படத்தை பற்றி எழுதியுள்ளார் ஆறாம் வகுப்பு மாணவர் ஒருவர். அவருடைய தேர்வுத்தாள் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.
School Student Write About Master in Exam : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். தனக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். தன்னுடைய தந்தை எஸ்ஏ சந்திரசேகர் உதவியால் சந்திரலேகா என்ற திரைப்படத்தின் மூலமாக நாயகனாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இந்த மூஞ்சியெல்லாம் ஹீரோவா என பல மோசமான விமர்சனங்களை தாண்டி இன்று திரையுலகமே கொண்டாடும் உச்ச நடிகராக இடம்பிடித்துள்ளார். அதற்கு முழுக்க முழுக்க அவருடைய தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் தான் காரணம் என்று கூறினால் அது மிகையாகாது.
இவருடைய நடிப்பில் இறுதியாக வெளியாகியிருந்த திரைப்படம் மாஸ்டர். இத்திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க அனிருத் இசையமைத்திருந்தார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் திரைப்படத்தை தயாரித்திருந்தது. இந்த படம் திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைக்கு மட்டுமே அனுமதி என்ற கட்டுப்பாட்டுடன் வெளியானது. இருப்பினும் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று ரூபாய் 300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது. தற்போதைய ஆறாம் வகுப்பு மாணவன் ஒருவன் திரையரங்கிற்கு படம் பார்த்த அனுபவத்தை எழுதுக என்ற கேள்விக்கு மாஸ்டர் திரைப்படம் பார்த்த அனுபவத்தை எழுதியுள்ளார்.
அதாவது அந்தச் சிறுவன் தன்னுடைய தேர்வுத் தாளில் நான் திரையரங்கிற்கு சென்று பார்த்த முதல் திரைப்படம் மாஸ்டர். இந்த திரைப்படத்தில் வாத்தி கம்மிங் பாடல் எனக்கு மிகவும் பிடித்தது. குற்றங்களைச் செய்யும் பள்ளி மாணவர்களை அதிலிருந்து எப்படி மீட்டு எடுக்கிறார் என்பதுதான் படத்தின் கதை என கூறியுள்ளார். ஆறாம் வகுப்பு மாணவன் தேர்வுத் தாளில் மாஸ்டர் படம் பற்றி எழுதிய புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது. மாஸ்டர் படத்தில் தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள தளபதி 65 படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கும் ராக்ஸ்டார் அனிருத் தான் இசையமைத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.