School Education Department
School Education Department

School Education Department – சென்னை: தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் , மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்தவும், கற்றல் திறன் மேம்பாடு மற்றும் பார்க்கும் திறன், மற்றும் மாணவர்களின் ஆங்கிலத்தில் எழுத, பேச திறனை மேம்படுத்துதல் உள்ளிட்டவற்றை,

அடிப்படையாகக் கொண்டு ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இனி எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்படுகிறது என்று பள்ளி கல்வித்துறை அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதனால், தமிழகம் முழுவதும் 2381 அங்கன்வாடி மையங்களில் வரும் ஜனவரி முதல் செயல்பட உள்ள எல்.கே.ஜி, யூ.கே.ஜி.

வகுப்புகளுக்கு 7 கோடியே 73 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கி பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

எல்.கே.ஜி., யூ.கே.ஜி. பயில்வதற்கு 53 ஆயிரத்து 993 மாணவர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகபட்சமாக வேலூர் மாவட்டத்தில் 171 மையங்களில் 4803 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.

இதற்காக 6 கோடியே 10 லட்சத்து 57 ஆயிரம் ரூபாயை பள்ளிக்கல்வித்துறையும், 1 கோடியே 62 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயை சமூகநலம் மற்றும் மதிய உணவுத்திட்டத் துறை ஒதுக்கீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அங்கன்வாடியில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகள் வர இருப்பது, பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.