சுப்ரமணியபுரம் படத்தில் சுவாதியை கொள்ளாதது ஏன் என சர்ச்சை புகைப்படத்திற்கு விளக்கம் அளித்து உள்ளார் இயக்குனர் சசிகுமார்.

SasiKumar Explain on Subramaniapuram Controversy : தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் சசிகுமார். இவரது இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் சுப்ரமணியபுரம். நடிகர் ஜெய் சமுத்திரகனி என பல திரையுலக பிரபலங்கள் இந்த படத்தில் இணைந்து நடித்திருந்தனர். நாயகியாக நடிகை ஸ்வாதி நடித்திருந்தார்.

ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை வெற்றியையும் பெற்ற இந்த திரைப்படத்தை மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸ் செய்தால் கூட அதிகமான கூட்டம் வரும்.

அந்த அளவிற்கு ஒரு பெரிய வெற்றியைப் பெற்ற இந்த படத்தின் டிரெய்லரில் நடிகை சுவாதியின் அருகே நடிகர் ஜெய் கையில் கத்தியுடன் அமர்ந்திருப்பது போன்ற ஒரு புகைப்படம் இடம் பெற்றிருக்கும். ஆனால் இந்த காட்சி படத்தில் இடம் பெறவில்லை.

இதுகுறித்து தற்போது ரசிகர் ஒருவர் நாயகி சுவாதியை கொள்ளாதது ஏன் என்று ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்ப அது டிரைலரில் வைப்பதற்காக எடுக்கப்பட்ட போட்டோ ஷூட் புகைப்படம். அந்த புகைப்படத்திற்கும் படத்திற்கும் சம்பந்தமில்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.