V.K Sasikala : ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இதில், விரைவில் சசிகலா கலந்து கொள்ள இருப்பதாக செய்தி வெளியாகி வருகிறது.
இதனால் மீண்டும் சசிகலா பரோலில் வருகிறாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக , ஆறுமுகம் கமிஷன் நீண்ட காலமாக விசாரணை நடத்தி வருகிறது.
இதுவரை 118 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவரில் இருந்து, அவருக்கு பாதுகாப்பு அளித்த அதிகாரிகள் வரை, அனைவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் சசிகலா உறவினர்களிடம் விசாரணை நடத்தினர், ஆனால் தற்சமயம் சசிகலா சிறையில் இருப்பதால், ஆணையத்தில் நேரில் ஆஜராகி அவரால் வாக்குமூலம் அளிக்க முடியவில்லை.
அதற்கு பதிலாக பிராமணர் பத்திரம் வழங்கி இருந்தார் . அதில், “ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது யார் யாரெல்லாம் வந்து சென்றனர் போன்ற தகவல்கள் இருந்தன”.
ஆனால் சசிகலா தந்த இந்த தகவலில், பல தவறான தகவல் என விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வரும் 10 ஆம் தேதிக்குள் இவ்வழக்கை முடித்துவிட வேண்டும் என்று ஆணையம் முடிவு செய்து உள்ளது .
எனவே இறுதிகட்ட பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது. மேலும் சசிகலாவிடம் மீண்டும் விசாரணை நடத்த உள்ளனர், ஆனால் எவ்வகையில் விசாரணை நடத்துவது என்று யோசனையில் உள்ளனர்.
ஏற்கனவே வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணை நடத்த திட்டமிட்டனர், ஆனால் சிறையில் அந்த வசதி இல்லாத காரணத்தால், சசிகலாவை பரோலில் வெளியே எடுத்து விசாரணை நடத்தலாமா? அல்லது சிறையிலேயே சென்று விசாரணை நடத்தலாமா? அல்லது வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணை நடத்தலாமா என்று ஆலோசனை நடத்தி வருகின்றனர்.