கொரானாவை ஒழித்துக்கட்ட போலீசாருடன் கைகோர்த்து களத்தில் இறங்கியுள்ளார் இயக்குநர் சசிகுமார்.
Sasi Kumar Joins With Madurai Police : சீனாவில் தோன்றிய கரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் அதிவேகமாக பரவி 13 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களை பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.
சரியான நேரத்தில் மத்திய மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்ததால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையை குறைக்க முடிந்துள்ளது.
இருப்பினும் சிலர் ஊரடங்கு உத்தரவை மீறி சாலைகளில் சுற்றித் திரியும் பல்வேறு செய்திகளையும பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.
இந்த நிலையில் நடிகர் இயக்குனருமான சசிகுமார் அவர்கள் மதுரை மாவட்ட காவல் துறையுடன் இணைந்து ஊரடங்கு உத்தரவையும் மீறி சாலைகளில் திரியும் மக்களுக்கு அறிவுரை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.
இதன் புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மக்களுக்காக களத்தில் இறங்கியுள்ள சசிகுமாரை பலரும் பாராட்டி வருகின்றனர்.
COVID-19 Lockdown : Actor #Sasikumar Volunteer Service in Madurai
👉 https://t.co/ASvgW2QEN5#CoronaVirus #Coronaindia #coronavirusindia #CoronaUpdates #LockdownExtended #Tamilnadu #Madurai #Police #COVID2019india #Covid_19 @SasikumarDir
— Kalakkal Cinema (@kalakkalcinema) April 18, 2020