Sarkar Problem : தளபதி விஜயின் சர்கார் பிரச்சனை ஒரு வழியாக முடிவுக்கு வந்திருப்பது ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.
தளபதி விஜய் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள சர்கார் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் தீபாவளிக்கு உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
மேலும் வருண் ராஜேந்தர் என்ற உதவி இயக்குனர் சர்கார் என்னுடைய கதை, செங்கோல் என்ற பெயரில் நான் எழுதிய கதை என நீதி மன்றம் வரை சென்றிருந்தார்.
இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது கோர்ட்டில் ஆஜரான முருகதாஸ் தானும் வரும் ராஜேந்திரனும் சமரசமாக சென்று விட்டதாக கூறியிருந்தார்.
இதனால் சர்கார் படத்திற்கு எதிராக பெரும் தலைவலியாக இருந்து வந்த இந்த பிரச்சனையும் முடிவுக்கு வந்து விட்டதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
மேலும் இந்த கதை செங்கோல் கதை தான் எனவும் சர்கார் படத்தில் வருண் ராஜேந்திரனுக்கு நன்றி கூறி டைட்டிலில் பெயர் சேர்க்கவும், மேலும் 30 லட்சம் ருபாய் பணம் கொடுக்கவும் ஒப்பு கொண்டதாகவும் கூறியதாக தகவல்கள் கிடைத்துள்ளது.