சர்கார் படத்தில் தளபதி விஜய் வில்லனாக நடித்திருப்பதாக ஏ ஆர் முருகதாஸ் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
தளபதி விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராதாரவி, யோகி பாபு, பழ கருப்பையா மற்றும் பலர் இணைந்து நடித்துள்ள படம் சர்கார்.
சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்க ஏ ஆர் ரகுமான் இசையமைத்து வருகிறார்.
இன்று மாலை ஆறு மணிக்கு டீசர் வெளியாக உள்ள நிலையில் முருகதாஸ் அளித்த பேட்டி ஒன்றில் படத்தை பற்றிய பல சுவாரஸ்ய தகவல்களை கூறியுள்ளார்.
கூகுள் நிறுவனத்தின் CEO-வான சுந்தர் பிச்சை அவர்களின் வாழ்க்கை கதையை மையமாகக் கொண்டு உருவாகியிருப்பதாக கூறியுள்ளார்.
வெளிநாட்டில் படித்துவிட்டு சொந்த நாடான இந்தியாவிற்கு தளபதி விஜய் மாசான வில்லனாக வருகிறார். அதன் பின்னர் இந்தியாவில் நடக்கும் ஊழல்களை தடுப்பதற்காக ஹீரோவாக மாறுவார் என கூறியுள்ளார்.
மேலும் இந்த படத்தின் கதையை மெர்சல் பட ரிலீசுக்கு முன்னரே விஜய்யிடம் கூறிவிட்டதாகவும் முருகதாஸ் கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் படத்திற்கு முதலில் வில்லாதி வில்லன் என டைட்டில் வைக்க இருந்ததாகவும் கூறியுள்ளார்.
முருகதாஸ் அவர்கள் கூறியதையெல்லாம் வைத்து பார்க்கும்போது இந்தியத் தேர்தல்களில் நடைபெறும் ஊழல்களுக்கு எதிரான படமாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் டீசர் வெளியானது இந்த படத்தின் கதையை பற்றிய தகவல்கள் தெளிவாக கிடைக்கும் எனவும் நம்பலாம்.