Karunakaran Tweet : சர்கார் படத்தில் மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட பொருட்களை தீயிலிட்டு கொளுத்தியிருந்த காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தன.
தற்போது இது குறித்து கருணாகரன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
சர்கார் இசை வெளியீட்டு விழாவில் தளபதி விஜய் பேசியதை பற்றி ட்விட்டரில் கேள்வி எழுப்பி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.
இதனால் விஜய் ரசிகர்கள் அவரை மோசமாக விமர்சனம் செய்து வந்தனர். இறுதியில் கருணாகரன் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டதால் பிரச்சனை முடிவுக்கு வந்தது.
இதனையடுத்து தற்போது மீண்டும் ட்விட்டருக்கு வந்த கருணாகரனிடம் தளபதி ரசிகர்கள் விஜயை பிடிக்குமா? பிடிக்காதா? என கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதற்கு மிகவும் பிடிக்கும் என கூறியுள்ளார். விஜய் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தாலும் நடிப்பேன் என கூறியுள்ளார். அதன் பின்னர் நீங்கள் சர்கார் படம் பார்த்து மிக்சி, லேப்டாப் எதையாவது உடைத்தீர்களா? என கேட்டுள்ளனர்.
அதற்கு இல்லை, உடைத்தால் நான் தான் மீண்டும் வாங்க வேண்டும் என கூறியுள்ளார்.