முன்னணி இயக்குனர் சுசீந்திரனால் சரிகமப கார்த்திக்கு மிக பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.
Saregamapa Contestant Karthik : சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி சேனல்களில் ஒன்று ஜீ தமிழ்.. இதில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி சரிகமப. இந்த நிகழ்ச்சியில் மனநலம் குன்றியவரான கார்த்திக் என்பவர் பாடல்களை பாடி அசர வைத்து வருகிறார்.
இவருக்கு தற்போது சுசீந்திரன் படத்தில் பாடுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. கால்பந்து போட்டியை மையமாக கொண்டு சுசீந்திரன் இயக்கி வரும் சாம்பியன்.
விஜய் பாடிய வெறித்தனம் பாடலில் இதை கவனித்தீர்களா? – ரசிகர்களை கொண்டாட வைத்த விசியம்.!
விளையாட்டை மையப்படுத்திய கதை என்றாலும் பாண்டிநாடு, நான் மகான் அல்ல படங்களை போன்ற பழிக்கு பழி வாங்கும் கதைக்களத்தில் தான் உருவாகி வருகிறது.
அரோல் குரோலி இசையமைத்து வரும் இந்த படத்தில் ஒரு பாடல் ஒன்றை பாடியுள்ளாராம் கார்த்திக்.
இதனால் ரசிகர்கள் பலரும் கார்த்திக்கிற்கு வாழ்த்துக்களையும் அவருக்கு வாய்ப்பு கொடுத்த சுசீந்திரனுக்கு பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.