வெளியே அனுப்பி சரவணனை காயப்படுத்தியது மட்டுமில்லாமல் அவரை மேலும் வருத்தமடைய செய்துள்ளது விஜய் டிவி.
தமிழ் சினிமாவில் ஹீரோவாக வலம் வந்து பின்னர் கார்த்தியுடன் பருத்திவீரன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் சரவணன்.
இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் நல்ல மதிப்பை பெற்றிருந்தார்.
ஆனால் திடீரென இவர் பெண்களை பற்றி தவறாக பேசியதாக கூறி அந்த நிகழ்ச்சியில் இருந்து யாருக்கும் தெரியாமல் வெளியேற்றியது.
இது ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து தற்போது சரவணன் அளித்துள்ள பேட்டி ஒன்றில் என்னை வெளியே அனுப்பி காயப்படுத்தியது மட்டுமில்லாமல் சம்பளம் தராமலும் இழுத்தடித்ததாக கூறியுள்ளார்.
மேலும் நான் 100 நாள் வரை அக்ரீமெண்ட் படிதான் நடந்து கொண்டேன், அப்படி அமைதியாக செயல்பட்டும் உடனடியாக சம்பளம் தரவில்லை என கூறியுள்ளார்.