11 அறுவைச் சிகிச்சைகளை சந்தித்து அதிலிருந்து மீண்டு வந்த நடிகை கொரானாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளார்.

Saranya Sasi Health Status : தமிழ் சினிமாவில் வெளியான பச்சை என்கிற காத்து படத்தில் நடித்தவர் சரண்யா சசி. மலையாளத்தில் சோட்டா மும்பை, தலப்பாவு, பாம்பே மார்ச் 12, மரியா காலிப்பினலு என பல படங்களில் நடித்துள்ளார்.

சில வருடங்களுக்கு முன்னர் மூளையில் கட்டி ஏற்பட்ட இவருக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டு அதில் இருந்து மீண்டு எழுந்தார். இதில் ஏற்கனவே இவருக்கு பதினொரு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. இவருடைய மருத்துவ செலவிற்கு மலையாள நடிகர்கள் உதவினார்கள்.

இப்படியான நிலையில் சரண்யா சசி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு இருப்பதாக உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக இந்த தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.