ஐயோ சாரிங்க என ஏர்போர்ட்டில் பிரபல இசையமைப்பாளரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் தல அஜித்.
Santhosh Narayanan About Ajith : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். அஜித்தை பிடிக்காதவர்கள் திரை உலகில் எவரும் இல்லை. அனைவரிடமும் நல்ல குணமான நடிகர் அமைதியானவர் அனைவருக்கும் மரியாதை கொடுப்பவர் என்று பெயரெடுத்தவர்.
அஜித்தை சந்திக்கும் அத்தனை பிரபலங்களும் அவருடன் செல்பி எடுத்து அதனை தங்களின் வாழ்நாள் சாதனை போலவே நினைத்து மகிழ்ச்சி கொள்வதுண்டு.
அதே போல் ஒரு முறை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஏர்போர்ட்டில் தல அஜித்தை சந்தித்து உள்ளார். அப்போது அவரிடம் பேசிய போது அது கையைப் பிடித்துக் கொண்டு 5 நிமிடம் பேசியுள்ளார்.
நீங்கள் என்ன பண்றீங்க எனக்கட்க சந்தோஷ் நாராயணன் நான் இசையமைப்பாளராக இருக்கிறேன் எனக் கூறியுள்ளார். ஆனால் அஜித்துக்கு அவரைப்பற்றி தெரியவில்லை.
அதன் பின்னர் சந்தோஷ் நாராயணன் மனைவி அவரை பற்றி எடுத்துக் கூறியுள்ளார். பின்னர் தல அஜித் சந்தோசை தனியாக அழைத்து சென்று ஐயோ ரொம்ப சாரிங்க.. எனக்கு உங்கள பத்தி தெரியல அதான் அப்படி கேட்டுட்டேன் மன்னிப்பு கேட்டுள்ளார்.
மேலும் தல அஜித் தன்னிடம் போட்டோ எடுக்க வந்தவர்களிடம் கூட வெளியே எடுத்துக் கொள்ளலாம் என பணிவாகக் கூறினார், அவருக்கு அப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை. ஆனால் அனைவரையும் மதித்து நடந்து கொண்டார். அந்தப் பணிவு அனைவருக்கும் வராது என சந்தோஷ் நாராயணன் கூறியுள்ளார்.