MeToo

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இளையதளபதி சீரியல் நாயகியான சஞ்சனா கல்ராணிக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை குறித்து பதிவு செய்துள்ளார்.

தமிழில் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நிக்கி கல்ராணி. இவரின் சகோதரி சஞ்சனா கல்ராணி.

தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பிஸியான நடிகையாக வலம் வருகிறார். அதே சமயம் சீரியலிலும் நடித்து வருகிறார்.

இவர் தற்போது மீ டூ விவகாரத்தில் தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து பேசியுள்ளார்.

முதல் முதலாக தியுலகில் நடிக்க வந்த பொது கன்னடத்தில் கண்டா கண்டாய்தி என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

படத்தில் நடிக்கும் போது முத்தக்காட்சி ஒன்று உள்ளது. அதில் நீங்கள் நடிக்க வேண்டும் என கூறி ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கி இருந்தனர். நானும் முக்கியமான காட்சி என்பதால் நடிக்க ஒப்பு கொண்டேன்.

ஆனால் அந்த முத்த காட்சி சரியா வரவில்லை என கூறி என்னை வற்புறுத்தி படத்தில் நடித்த நடிகருக்கு 50 முறை முத்தம் கொடுக்க வைத்தார்கள்.

எனக்கு அப்போது இது தவறாக படுவது போல் தெரிந்தாலும் அவர்களை எதிர்த்து பேச முடியவில்லை.

இந்த காட்சியை படமாக்கிய போது என்னுடன் இருந்த என் அம்மாவையும் தூரமாக அனுப்பி விட்டார்கள்.

அதன் பின்னர் நான் இதையெல்லாம் என் அம்மாவிடம் சொல்ல தயங்கி கொண்டு மனதிலேயே போட்டு புதைத்து கொண்டேன்.

தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற எண்ணம் வரை சென்று விட்டேன். என்னை புரிந்து கொண்ட என் அம்மா தான் அந்த எண்ணத்தில் இருந்து வெளியே கொண்டு வந்தார் என கூறியுளளார்.

Sanjana Galrani
Sanjana Galrani
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.