Sania Mirza : இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் மாலிக் தம்பதியருக்கு, ஹைதராபாத்தில் உள்ள ரெயின்போ மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.
அந்த குழந்தைக்கு கடவுளின் பரிசு என்ற அர்த்தம் கொண்ட ” இஷான் மிர்சா-மாலிக் ” என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இதற்கிடையில் அந்த குழந்தைக்கு எந்த நாட்டு குடியுரிமை கிடைக்கும் என்ற குழப்பம் எழுந்தது. இதற்கு மாலிக் ஊடகம் ஒன்றில் பதில் அளித்தது உள்ளார்.
பாகிஸ்தான் பொறுத்த வரை 19 நாடுகளுடன் மட்டுமே இரட்டை குடியுரிமை கொண்டுள்ளது. அதில் நமது இந்தியா இடம் பெறவில்லை.
மேலும் அதனை குறித்து மாலிக் கூறுகையில் எங்களது பிள்ளை இந்தியக் குடிமகனும் இல்லை, பாகிஸ்தான் குடிமகனும் இல்லை என்று கூறி உள்ளார் .
இருந்தும் சானியா இன்னும் தனது இந்திய குடியுரிமையை விட்டு கொடுக்காத நிலையில், குழந்தைக்கு பாகிஸ்தான் குடியுரிமை கிடைக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.
மேலும் சானியா மிர்சாவுக்கு ஆண் குழந்தை பிறந்ததை அடுத்து ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.