Sanchita Shetty in Thiruvannamalai

தடையை மீறி திருவண்ணாமலை உச்சிக்கு சென்று மகாதீப தரிசனம் செய்துள்ளார் நடிகை சஞ்சிதா செட்டி.

Sanchita Shetty in Thiruvannamalai : தமிழ் சினிமாவில் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் சஞ்சிதா ஷெட்டி. இவர் அவ்வப்போது சில படங்களில் நாயகியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இவர் கார்த்திகை தீபத் திருவிழா நடந்து முடிந்ததைத் தொடர்ந்து திருவண்ணாமலை சென்று மலைமீது ஏறி சுவாமி தரிசனம் செய்துள்ளார்.

இவர் தரிசனம் செய்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக தொடங்கியது.

ரசிகர்கள் பலரும் திருவண்ணாமலையில் வெளி மாவட்ட மக்கள் சுவாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் நீங்கள் எப்படி தரிசனம் செய்தீர்கள் என கேள்வி எழுப்பியது சர்ச்சையை உண்டாக்கியது.

இந்த நிலையில் இது குறித்து திருவண்ணாமலை வனத்துறை அலுவலர் கிருபா சங்கரிடம் கேட்டபோது அவர் எப்படி மலை உச்சிக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார் என தெரியவில்லை.

நிச்சயம் அவரை உள்ளூர் வழிகாட்டி ( கைடு ) தான் அழைத்து சென்றிருப்பார். இதுகுறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.