பார்ப்பவரை பதற வைக்கும் அளவிற்கு சமீரா ரெட்டியின் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் சமீரா ரெட்டி. வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து பிரபலமான இவர் அதன் பின்னர் பல படங்களில் நடித்தார்.
மார்க்கெட் சற்றும் குறையாத போதே திருமணம் செய்து கொண்டு நடிப்பிற்கு டாட்டா காட்டி விட்டார், அதன் பின்னர் குழந்தையும் அம்மாவும் ஆகினார்.
தற்போது மீண்டும் நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் தற்போது அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீருக்கடியில் போட்டோஷூட் நடத்தியுள்ளார்.
அந்த புகைப்படங்களை சமூக வளையதளங்களில் ஷேர் செய்ய அவை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.